தமிழ்நாடு

தமிழகத்தின் இந்த மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

Published

on

தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில்,

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக விழுப்புரம் மாட்டத்தின் மணம்பூண்டியில் 17 சென்டி மீட்டர் மழையும், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் 16 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளன.

அடுத்த வரும் இரண்டு தினங்களைப் பொறுத்தவரை, தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையைப் பொறுத்தவரையில் வட கடலோர மாவட்டங்களான விழுப்புரம், புதுவை, கடலூர், நாகை, காரைக்கால், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 1 முதல் இன்றுவரை வட கிழக்குப் பருவமழை மூலம், தமிழகம் மற்றும் புதுவையில் 453 மில்லி மீட்டர் பெய்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் பெய்யும் இயல்பு அளவு 419 மில்லி மீட்டர். இது இயல்பைவிட 8 சதவீதம் அதிகம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Trending

Exit mobile version