சினிமா செய்திகள்

வெங்கட் பிரபுவை கலாய்த்த நெட்டிசன்; அவர் என்ன ரிப்ளை செய்தார் தெரியுமா?

Published

on

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை டிரைலர் நேற்று வெளியாகி 4.9 மில்லியன் பார்வைகளை அள்ளி அசத்தி வருகிறது.

இந்த டிரைலரை பார்த்த சில ரசிகர்கள், மீண்டும் வெங்கட் பிரபு மற்றும் யுவன் கூட்டணி மங்கத்தா படத்தை போல எப்போது சேரும்? என கேள்வி எழுப்பியிருந்தனர். அந்த கமெண்டுக்கு கீழே ரிஸி ரிஸியான் என்பவர், வெங்கட் பிரபுவிடம் கதையில்லை, அவர் எடுத்தா படம் பிளாப் ஆகிடும் என பதிவிட்டார்.

இதனை கண்ட வெங்கட் பிரபு, ”வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றேன் பிரோ! என்னைக்கி என்கிட்ட கதை இருந்துருக்குன்னு” அவர் ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும், நேர்கொண்ட பார்வை படத்தின் இறுதியில் அஜித் பேசும் வசனமான, ”ஒருத்தர் மேல வச்சிருக்க விஸ்வாசத்த காட்ட மத்தவங்கள ஏன் அசிங்கப்படுத்துறீங்க” என்ற வசனத்தையும் பதிவிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version