சினிமா
விரைவில் மாநாடு 2.. சிம்பு ரசிகர்களை குஷிப்படுத்திய வெங்கட் பிரபு….
சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகவில்லை. நவம்பர் 25 ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதிலும் சில சிக்கல் ஏற்பட்டதால் தேதியின்று ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்படுவதாக இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்து சிம்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
ஆனால், இரவோடு இரவாக பணப்பிரச்சனைகள் பேசி முடிக்கப்பட்டு ஒருவழியாக மாநாடு படம் 25ம் தேதி காலை வெளியானது. இப்படத்தை சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்ததால் அவர்கள் தியேட்டர்களில் குவிந்தனர். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பலராலும் ரசிக்கப்பட்டும் பாராட்டப்பட்டும் வருகிறது. மேலும், இப்படம் நல்ல வசூலையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் 2ம் பாகம் விரைவில் துவங்கும் என அப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு டிவிட்டர் ஸ்பேஸில் உறுதி செய்துள்ளார். கையில் வைத்திருக்கும் படங்களை முடித்துவிட்டு மாநாடு 2 படத்தை இயக்குவேன் என அவர் அறிவித்துள்ளார். மாநாடு படம் முடியும் போது, அப்துல் காலிக் (சிம்பு) மீண்டும் லுப்புக்குள் வரும்போது தனுஷ்கோடி (எஸ்.ஜே.சூர்யா) மீண்டும் உயிர் பெறுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தை அவர் சுட்டிக் காட்டினார். மாநாடு 2 படத்தின் கதை தயாரான பின் அப்படம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தி சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.