சினிமா செய்திகள்

சிம்புதேவனுக்கு கைகொடுத்த வெங்கட் பிரபு!

Published

on

பிரம்மாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்து இம்சை அரசன் 23ம் புலிகேசி எனும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சிம்புதேவன் இயக்கத்தில் புதிதாக உருவாகவுள்ள கசடதபற படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு தயாரிக்க முன்வந்துள்ளார்.

ஷங்கர் தயாரிப்பில் வெளியான இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அவரது தயாரிப்பில் சிம்புதேவன் அடுத்து இயக்கிய அறை எண் 305ல் கடவுள் படம் ஹாலிவுட் படத்தின் காப்பி என்பது தெரிய வந்ததும், படம் பெரிய அளவில் போகவில்லை என்பதாலும், இயக்குநர் ஷங்கருக்கும் சிம்புதேவனுக்கும் இடையே கருத்து மோதல்கள் உருவாகின.

சிம்புதேவன் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் மற்றும் விஜய்யின் புலி படங்கள் படுதோல்வி அடைந்த நிலையில், தயாரிப்பாளர்கள் மற்றும் புதிய படங்கள் கிடைக்காமல் இயக்குநர் சிம்புதேவன் திண்டாடி வந்தார்.

மீண்டும் ஷங்கருடன் சமரச பேச்சுவார்த்தைகள் நடந்த நிலையில், வடிவேலுவை வைத்து 24ம் புலிகேசி படத்தை இயக்க சிம்புதேவன் ஆயத்தமானார். ஆனால், இம்முறை வடிவேலு, இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் தொழில் ரீதியாக தொல்லைக் கொடுப்பதாக வந்த புகார்களை அடுத்து அந்த படம் ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு தயாரிப்பில் கசடதபற எனும் புதிய படத்தை சிம்புதேவன் இயக்குகிறார்.

தென் சென்னையின் கதைகளை மையப்படுத்தி இந்த படம் உருவாகவுள்ளதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version