இந்தியா
மாநிலங்களவையில் கண்ணீர் விட்டு அழுத வெங்கையா நாயுடு!
மாநிலங்களவை தலைவராக உள்ளார் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு. இன்று காலை மாநிலங்களவை கூடியதும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டிக்கு மாநிலங்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மாநிலங்களவை கூடியதும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டிக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு. அப்போது அவர் தனக்கும் ஜெய்பால் ரெட்டிக்கும் ஆந்திர அரசியலிலும், தேசிய அரசியலிலும் இருந்த நட்பை நினைவு கூர்ந்து பேசினார்.
அப்போது தங்களின் 40 வருட நட்பு மற்றும் அரசியல் நிகழ்வுகள் குறித்து பேசினார். 1980-களில் ஆந்திர சட்டசபையில் தாங்கள் இணைந்து பணியாற்றியது குறித்து பேசிய அவர் ஜெய்பால் ரெட்டியின் மறைவு தன்னை பெரிதும் பாதித்துள்ளதாக கூறி அவையிலேயே கண்ணீர் விட்டு கலங்கி அழுதார்.