தமிழ்நாடு
பதவியேற்றதும் ’உதயநிதி வாழ்க’ என கூறிய திமுக எம்பி: கண்டித்த வெங்கையா நாயுடு!
![venkaiah naidu 1200 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/venkaiah-naidu-1200.jpg)
திமுக எம்பி இன்று மாநிலங்களவை ஏற்றதும் ’வெல்க தளபதி வாழ்க உதயநிதி’ என கூறியதை அடுத்து துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கண்டித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் திமுகவை சேர்ந்த எம்எம் அப்துல்லா, கனிமொழி மற்றும் ராஜேஷ் குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் மாநிலங்களவை எம்பிகளாக தேர்வு செய்யப்பட்ட மூவரும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில் ராஜேஷ்குமார் இன்று எம்பியாக பதவியேற்றபோது உறுதிமொழிக்கு பிறகு ’வெல்க தளபதி, வெல்க அண்ணன் உதயநிதி என்று முடித்தார்.
இதற்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள், ‘நீங்கள் வெளியே சென்று என்ன வேண்டுமானாலும் முழக்கமிடுங்கள் அது பற்றி எந்த கவலையும் இல்லை என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்கும் ஒருவர் உதயநிதியின் பெயரை குறிப்பிடுவது அவசியம் தானா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#JUSTIN | வெல்க அண்ணன் உதயநிதி.. மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட திமுகவைச் சேர்ந்த ராஜேஷ் குமார்!https://t.co/wupaoCQKa2 | #MKStalin | #UdhayanidhiStalin | #RajyaSabha | @arivalayam pic.twitter.com/DlaZN0ghks
— ABP Nadu (@abpnadu) November 29, 2021