தமிழ்நாடு

வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை: சிசிடிவி மீது ஸ்ப்ரே அடிக்கும் கொள்ளையன்!

Published

on

வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் 30 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட போது பதிவான சிசிடிவி வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

வேலூரில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் 30 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

மோப்பநாய் உதவியுடன் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கடையில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராவில் உள்ள காட்சிகளும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் ஒருசில சிசிடிவி கேமராவில் கொள்ளையர்கள் தென்படுகிறார்கள் என்றும் முகமூடி போட்ட கொள்ளையர்கள் ஒவ்வொரு சிசிடிவி கேமராவில் மீதும் ஸ்பிரே அடிக்கும் காட்சி பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு அடுத்த கட்ட விசாரணையை போலீசார் ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version