தமிழ்நாடு

புதிய சின்னத்தில் போட்டியிட்டும் வெற்றி பெற்றுள்ளோம்: விசிக தலைவர் திருமாவளவன்

Published

on

புதிய சின்னத்தில் போட்டியிட்டும் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது மேலும் கூறியதாவது:

கூட்டணியை சிதறவிடாமல் மாபெரும் வெற்றியை ஸ்டாலின் பெற்றுள்ளார். அவர் ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை வழங்குவதே இலட்சியம் என கூறியுள்ளார். நல்லாட்சியை வழங்க கூடிய ஆற்றல் ஸ்டாலினுக்கு உண்டு. நல்லாட்சியை வழங்கும் நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவோம்

மேலும் ஸ்டாலின் சந்திக்கக்கூடிய முதல் சவால் கொரோனாவாகத்தான் இருக்கும். அதை அவர் சரியாக கையாள்வார் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் தமிழகத்தில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. பாஜகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளார்கள். தமிழகம் மட்டுமின்றி கேரளா மேற்கு வங்காளம் ஆகிய பெரிய மாநிலங்களிலும் பாஜக வுக்கு தோல்வி ஏற்பட்டு உள்ளது. பாஜகவின் சதி முயற்சிகள் மேற்குவங்கத்தில் எடுபடவில்லை. கேரளாவில் அந்தக் கட்சியால் ஒரு இடத்தை கூட பெற முடியவில்லை என்று கூறியுள்ளார்

மேலும் புதிய சின்னத்தில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரண்டு பொது தொகுதிகள் மற்றும் இரண்டு தனித் தொகுதிகள் என நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version