சினிமா

விஜயின் சர்கார் அமைக்க எனது ‘செங்கோலை’ பரிசளிக்கிறேன்.. இயக்குனர் வருண் அதிரடி

Published

on

சென்னை: நடிகர் விஜயின் சர்கார் அமைக்க எனது ‘செங்கோலை’ பரிசளிக்கிறேன் என்று சர்கார் கதைக்கு சொந்தக்காரரான வருண் அதிரடி பேட்டி அளித்துள்ளார்.

செங்கோல் படத்தின் கதையை எழுதி செங்கோல் என்று பதிவு செய்திருந்த வருண் ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

நான் சர்காருக்கு தடை கேட்டு கோர்ட்டுக்கு செல்லவில்லை. அங்கீகாரம் கேட்டுத்தான் கோர்ட்டுக்கு சென்றேன். எனக்கான அங்கீகாரம் படத்தில் எனக்கு கிடைத்தால் போதும் என்றுதான் கோர்ட்டுக்கு சென்றேன்.

2004ல் நான் விஜய்க்காக எழுதிய போராட்டம் இது. அவரை மனதில்வைத்துதான் இந்த கதையை எழுதினேன். அவருக்கான படம்தான் இது.

என்னுடைய இந்த போராட்டத்திற்கு பின்னில் இருந்தது விஜய்தான். நடிகர் விஜயின் போராட்ட குணம்தான் என்னை போராட தூண்டியது. நான் விஜயை சென்று நேரில் சந்திப்பேன். விரைவில் அவரை சந்திப்பேன்.

விஜயின் சர்கார் அமைக்க எனது ‘செங்கோலை’ பரிசாக அளிக்கிறேன். நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

 

 

 

 

 

seithichurul

Trending

Exit mobile version