தமிழ்நாடு

அரசியல்வாதிகளை செஞ்சிடலாமா? வரலட்சுமியின் வைரல் வீடியோ

Published

on

நாளை தேர்தல் நாளில் அரசியல்வாதிகளை செஞ்சிடலாமா? என நடிகை வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தமிழகத்தில் நாளை 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து தேர்தலில் அனைத்து தரப்பினர்களும் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக திரையுலகினர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வாக்களிக்க வேண்டியதன் விழிப்புணர்வு குறித்த வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் நடிகை வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் அரசியல்வாதிகளை செஞ்சிடலாமா? என்ற வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: நாடு நமக்கு என்ன செய்தது என்று கேட்பதை விட நாம் நாட்டிற்கு என்ன செய்தோம் என்று தான் கேட்க வேண்டும். அதேபோல் அரசியல்வாதிகள் நமக்கு என்ன செய்தார்கள் என்று கேட்பதை விட நாம் அரசியல்வாதிக்கு என்ன செய்வோம் என்பதை காட்டவேண்டும். நாளை தேர்தலில் அரசியல்வாதிகளை ஓட்டு போட்டு செஞ்சுடுவோம் ஒருநாள், ஒரு ஓட்டு, நீ யாருன்னு காட்டு என்று வரலட்சுமி அந்த வீடியோவில் கூறியுள்ளார் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Trending

Exit mobile version