சினிமா

எனக்கே ரூம் போடுறான்னா? சான்ஸ் கேட்டு அலையும் இளம்பெண்களின் நிலை என்ன? வரலக்‌ஷ்மி அப்செட்!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல ஆண்டுகளாக வலம் வரும் நடிகர் சரத்குமாரின் மகள் வரலக்‌ஷ்மி சரத்குமார் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

பெரிய குடும்பத்து பின்னணியைக் கொண்ட தன்னிடமே ரியாலிட்டி ஷோவுக்காக பேச வந்த ஒரு நபர் மற்ற விஷயங்களுக்காக ஹோட்டலில் ரூம் போடவான்னு கேட்டான். எனக்கு செம கோபம் வந்தது அந்த ஆளை உடனடியாக விரட்டி விட்டேன் என சமீபத்தில் வெளியான அவரது கொன்றால் பாவம் படத்திற்கான ப்ரோமோஷன் பேட்டியில் பேசியது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

#image_title

இது பற்றி, என் ஃபிரெண்ட் கிட்ட சொன்னபோது, அவனை அறையாம சும்மாவா விட்ட? என்று கேட்டாள். அந்த நேரத்தில், இவ்ளோ பெரிய பேக்கிரவுண்ட் இருக்குற என் கிட்டேயே ரூம் போடாவான்னு தைரியமா அட்ஜெஸ்ட்மென்ட் பற்றி பேசுறான்னா வாய்ப்பு தேடி அலையும் இளம் நடிகைகளிடம் என்ன எல்லாம் கேட்பான்னு யோசித்து ஷாக் ஆகி தான் அவனை உடனடியா துரத்தி விட்டேன் என அந்த பேட்டியில் வெளிப்படையாக பேசி உள்ளார் வரலக்‌ஷ்மி சரத்குமார்.

#image_title

நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார் தொடர்ந்து ஹீரோயினாகவும் அவ்வப்போது வில்லியாகவும் நடித்து மிரட்டி வருகிறார். இந்த ஆண்டு சங்கராந்திக்கு பாலய்யா படமான வீர சிம்ஹா ரெட்டி படத்தில் பாலய்யாவுக்கு தங்கையாகவும் படத்தில் வில்லியாகவும் வரலக்‌ஷ்மி நடித்து மிரட்டி இருந்தார். அவர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான கொன்றால் பாவம் படமும் ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version