சினிமா செய்திகள்
ஹீரோயின் ஆகிறார் வனிதா விஜயகுமார்… நாயகி சார்ந்த படமாம்!
பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான ஒரு கதையில் கதாநாயகி ஆக ஒப்பந்தம் ஆகியுள்ளார் வனிதா விஜயகுமார்.
நடிகை வனிதா விஜயகுமார் முதன் முதலாக நடிகர் விஜய் உடன் சந்திரலேகா என்னும் படத்தில் கதாநாயகி ஆக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் ஒன்றிரண்டு படங்களில் நடித்தவர் பின்னர் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டார். பெர்சனல் வாழ்க்கையில் பல சிக்கல்களைச் சந்தித்து மீண்டுள்ளதாகக் கூறும் வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பொது வெளிக்கு வந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பின் மூலம் அடுத்தடுத்து விஜய் டிவி-யிலேயே குக்கு வித் கோமாளி, கலக்கப் போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இப்போது நாயகி ஆக ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் வனிதா. அனல்காற்று என்ற படத்தில் பெண்ணுக்கு முக்கியத்துவம் தரும் கதையில் நாயகி ஆக நடித்து வருகிறாராம் வனிதா.
பாம்பு சட்டை திரைப்படம் எடுத்த ஆதம் தாசன் தான் தற்போது அனல் காற்று படத்தை இயக்கி வருகிறாராம். இனி தொடர் வாய்ப்புகளுக்காக உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி வருகிறாராம் வனிதா.