சினிமா

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

Published

on

நடிகர் கமல் ஹாசன் பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் பிக்பாஸ் நிக்ழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட வனிதா பொதுமக்களுக்கு தெரியாத ரகசிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வனிதா பிக்பாஸ் வீட்டிற்கு இருக்கும் போது அங்கு அவரது ராஜ்ஜியம் தான். சக போட்டியாளர்களுடன் சண்டை போடுவது, கத்துவது என போட்டியை விருவிருப்பாக கொண்டு சென்றார். அவரை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. சொல்லப்போனால் பிக்பாஸே வனிதாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவார். வனிதாவின் அதிரடிகளை தாங்க முடியாமல் அவருக்கு முன்னால் மற்ற போட்டியாளர்கள் சத்தம்போட்டுக்கூட பேச மாட்டார்கள்.

இந்நிலையில் பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட வனிதா தற்போது யூ டியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார். அதில் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் ஒரு உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் இரவு லைட் ஆஃப் செய்வது போல் தொலைக்காட்சியில் தான் காட்டுவார்கள். ஆனால், ஒரு சில நிமிடங்களில் லைட் போட்டு விடுவார்கள். அந்த வெளிச்சத்திலேயே தான் உறங்க வேண்டும் என்ற ரகசியத்தை கூறியுள்ளார் அவர்.

Trending

Exit mobile version