சினிமா செய்திகள்

சிம்புவை பிடிக்காமல் வெளியேறினாரா வனிதா: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கப் போவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் சிம்புவை பிடிக்காமல்தான் வனிதா வெளியேறிவிட்டதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா, ஷாரிக் மற்றும் அபினய் ஆகிய 4 பேர் வெளியேறிய நிலையில் வலுக்கட்டாயமாக வனிதா தானாகவே நேற்று வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது .

இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் முக்கிய காரணம் கமல்ஹாசன் இல்லாததே என்றும் சிம்புவின் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதை வனிதா விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே பிராங்க் டாஸ்க்,கேப்டன்ஷிப்புக்கு கிடைத்ட மார்க்குகள், அரக்கர்கள் தேவதை டாஸ்க்கில் மனக்கசப்பு உள்பட பல்வேறு காரணங்களால் மன உளைச்சலுக்கு ஆளான ஆளான வனிதா சிம்புவின் வருகையையும் விரும்பவில்லை என்றும் அதனால் அவர் வெளியேறி விட்டதாகவும் கூறப்படுகிறது .

மேலும் இடையில் வெளியேறினால் அக்ரிமென்ட் படி பல சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று பிக்பாஸ் கூறியதாகவும் ஆனால் அதையெல்லாம் தான் எதிர்கொள்ள தயார் என்று கூறி விட்டு வனிதா வெளியேறி விட்டதாகவும் கூறப்படுகிறது .

 

seithichurul

Trending

Exit mobile version