சினிமா செய்திகள்

என்னை வீட்டுக்கு அனுப்புங்க: பிக்பாஸிடம் ஒரு மணி நேரம் கதறியழுத வனிதா!

Published

on

என்னை வீட்டுக்கு அனுப்புங்கள் என்று வனிதா பிக்பாஸ் இடம் கதறி அழுத வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய வனிதா முதலே அதிகார போக்குடன் நடந்து வருகிறார். அவர் சொல்வதுதான் சட்டம் என்றும் தன்னை மீறி யாரும் பேசக்கூடாது என்றும் வேறு யாராவது பேசினால் அதை உடனே நிறுத்துவதாகவும், அவர் மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ளது .

குறிப்பாக அவரது கேப்டஷிப்பில் நாங்கள் இந்த வீட்டில் இருக்கவே பயமாக இருக்கிறது என்று அபிராமி கூறியது கிட்ட தட்ட உண்மைதான் என்று அனைத்து போட்டியாளர்களும் கூறினர். அவரது கேப்டன்ஷிப்புக்கு ஒருவர் கூட நல்ல மதிப்பெண் அளிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

கமல்ஹாசனும் அவ்வப்போது வனிதாவின் குறைகளை சுட்டிக்காட்டியும் அவர் திருந்துவதாக தெரியவில்லை. இந்த நிலையில் இன்று நாமினேஷன் பிராஸசின் போது கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கதறி அழுது தன்னை வீட்டுக்கு அனுப்பி விடுமாறு வனிதா கூறினார் .

ஆனால் பிக் பாஸ் அவரை, ‘ நீங்கள் ஒரு வலிமையான போட்டியாளர் என்றும் நீங்கள் யாரையும் நம்பி இந்த வீட்டிற்கு வரவும் வரவில்லை என்றும் நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் என்னிடம் பேசலாம் என்றும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

Trending

Exit mobile version