சினிமா செய்திகள்

கோமா நிலைக்கு சென்ற ’வாணி ராணி’ சின்னத்திரை நடிகர்: ரசிகர்கள் அதிர்ச்சி

Published

on

ராதிகா நடித்த ’வாணி ராணி’ உள்பட பல சின்னத்திரை தொடர்களில் நடித்த நடிகர் ஒருவர் சென்னை மருத்துவமனையில் கோமா நிலைக்கு சென்று உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராதிகா நடித்த ’வாணி ராணி’ தொடரில் ராதிகாவின் கணவராக நடித்தவர் நடிகர் வேணு அரவிந்த். இவர் இந்த தொடரின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார் என்பதும் இவருக்கு ரசிகர்கள் குவிந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் வேணு அரவிந்த் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்றும் இதனை அடுத்து அவருக்கு தற்போது நிமோனியா பாதிப்பு மற்றும் மூளையில் கட்டி உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவருக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவர் தற்போது கோமா நிலைக்கு சென்று உள்ளதாகவும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

நடிகர் வேணு அரவிந்த் கோமா நிலையில் இருப்பதை அறிந்த சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

சின்னத்திரை மட்டுமின்றி திரைப்படங்களிலும் வேணு அரவிந்த் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கிய ’பகல் நிலவு’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான வேணு அரவிந்த், அதனை அடுத்து கமல்ஹாசனின் ’அந்த ஒரு நிமிடம்’ சிவாஜி கணேசன் நடித்த ’படிக்காத பண்ணையார்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அதேபோல் தொலைக்காட்சிகளில் தொலைக்காட்சி தொடரில் அவர் ’நிலாப்பெண்’ என்ற தொடரின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் ’அலையோசை’ ’ராசி மூலம்’ ’ராகுல் வம்சம்’ ’காதல் பகடை’ ’காசளவு நேசம்’ உள்பட பல தொடர்களில் நடித்துள்ளார். இருப்பினும் அவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை பெற்று கொடுத்தது ’வாணி ராணி’ தொடர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version