சினிமா செய்திகள்

அஜித்தை நேரில் சந்தித்து ‘வலிமை’ அப்டேட் கேட்ட ரசிகர்; ‘தல’ பளீச் பதில்!!!

Published

on

அஜித்தின் வலிமை படம் குறித்த அப்டேட்டை அவரிடமே ஒரு ரசிகர் கேட்டுள்ளார். அதற்கு அஜித்தும் ரிப்ளை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்தான சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளி வந்துள்ளது.

‘தல’ அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வலிமை’. கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக வலிமை படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்தப் படம் மெகா ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து இந்தக் கூட்டணியின் அடுத்தப் படைப்பாக வலிமை உருவாகி வருகிறது.

கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பின்னர் விறுவிறுப்பாக நடந்து வரும் வலிமை படத்தின் ஷூட்டிங் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய உள்ளதாம். வெளிநாடுகளில் படமாக்க வேண்டிய சில காட்சிகள் மட்டும் இன்னும் பாக்கி உள்ளதாக படக்குழுத் தரப்பு தகவல் சொல்கிறது. இந்நிலையில் அனைத்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகளையும் முடித்து, வரும் ஏப்ரல் மாதம் ‘வலிமை’ திரைப்படத்தை வெள்ளித்திரையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகிறது.

அதே நேரத்தில் போஸ்ட் புரொடெக்‌ஷன் வேலைகள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஆகஸ்ட் இரண்டாவது வாரம் படம் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

அஜித் ரசிகர்கள், ‘படம் சீக்கிரம் வரலைனாலும் பரவாயில்ல. அப்பப்போ அப்டேட் மட்டுமாவது கொடுங்க’ என்று வினோத், போனி கபூரிடம் கெஞ்சி வருகின்றனர்.

இந்நிலையில், ஹரிஷ் என்பவர், நேற்று மாலை அஜித்தை நேரில் சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட படத்தைத் தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஹரிஷ், நடந்த சம்பவம் குறித்து, ‘நேற்று வலிமை செட்டில் தல அஜித்தைப் பார்த்தேன். 10 நிமிடம் அவருடன் நேரம் செலவிட்டேன். அப்போது வலிமை அப்டேட் குறித்து அவரிடம் கேட்டோம். அதற்கு அவர் பிப்ரவரி முடிவதற்குள் அனைத்து அப்டேட்களும் வரும் என்றார். அவர் எங்களைச் சந்திக்க ஒப்புக் கொண்டது மகிழ்வளிக்கிறது’ என்றுள்ளார்.

எப்படியும் பிப்ரவரிக்குள் வலிமை அப்டேட் வரும் என்பதால் தல ரசிகர்களுக்கு குஷி தான்.

seithichurul

Trending

Exit mobile version