சினிமா செய்திகள்

அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்ட ‘வலிமை’ அம்மா பாடல் எழுதிய விக்னேஷ் சிவன்!

Published

on

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்தில் இடம்பெற்ற அம்மா பாடலை நேற்று படக்குழுவினர் வெளியிட்ட நிலையில் இந்த பாடல் மிகப்பெரிய அளவில் இணைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த பாடலை எழுதிய இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது அம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ‘வலிமை’ திரைப்படத்தில் இடம்பெற்ற அம்மா பாடல் நேற்று வெளியானது. யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்த இந்த பாடலை சித்ஶ்ரீராம் பாடினார் என்பதும், இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பாடல் வெளியான உடன் இணையதளத்தில் பலர் தங்களது அம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து ’நான் பார்த்த முதல் குரல் நீ’ என்றும் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அம்மா பாடலை எழுதிய விக்னேஷ் சிவன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த பாடல் தனது அம்மாவான ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி அவர்களுக்கு சமர்ப்பணம் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். இந்த பாடலை எழுத தனது வாய்ப்பு கொடுத்த யுவன் சங்கர் ராஜா, எச் வினோத் அவர்களுக்கு தனது நன்றி என்றும் அஜித் அவர்களின் படத்திற்கு பாடல் எழுதுவது தனக்கு கிடைத்த மிகப் பெரிய அதிர்ஷ்டம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விக்னேஷ் சிவனின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version