சினிமா செய்திகள்
படையப்பா எழுந்து வா! பாட்ஷாபோல் நடந்து வா: ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த வைரமுத்து!
![rajini vairamuthu 1200 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/rajini-vairamuthu-1200.jpg)
படையப்பா போல் எழுந்து வா, பாட்ஷா போல் நடந்து வா என கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். இந்த கவிதை தற்போது வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் உடல் நலக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த நாளங்களில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து அவரது உடல்நிலை தற்போது முன்னேறி வருவதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
இந்த நிலையில் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டுமென முதலமைச்சர் முக ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம், உலகநாயகன் கமல்ஹாசன் உள்பட பலர் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் வாழ்த்து தெரிவித்து வந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் சற்று முன் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் விரைவில் குணமாக கவிதை வடிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:
காவேரி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அரவிந்தனிடம்
திரு ரஜினியின் நலம் கேட்டேன்.
நாளுக்கு நாள் அவர் நலம் கூடிவரும் நம்பிக்கைத் தகவல்கள்
என் நிம்மதியை மீட்டெடுத்தன.
உத்தமக் கலைஞனே
காற்றாய் மீண்டு வா
கலைவெளியை ஆண்டு வா
படையப்பா எழுந்து வா
பாட்ஷாபோல் நடந்து வா
வாழ்த்துகிறேன்.
காவேரி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அரவிந்தனிடம்
திரு ரஜினியின் நலம் கேட்டேன்.நாளுக்கு நாள் அவர் நலம் கூடிவரும் நம்பிக்கைத் தகவல்கள்
என் நிம்மதியை மீட்டெடுத்தன.உத்தமக் கலைஞனே
காற்றாய் மீண்டு வா
கலைவெளியை ஆண்டு வாபடையப்பா எழுந்து வா
பாட்ஷாபோல் நடந்து வாவாழ்த்துகிறேன். pic.twitter.com/pB9zjj9vSO
— வைரமுத்து (@Vairamuthu) October 31, 2021