தமிழ்நாடு

நாளை 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடக்கும்: தலைமை தேர்தல் அதிகாரி உறுதி!

Published

on

நாளை தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடக்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒரு சில தொகுதிகளில் முறைகேடு நடந்துள்ளதால் அந்த தொகுதிகளில் வாக்குப்பதிவை தள்ளிவைக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் புகார் அளித்து வருகின்றனர். குறிப்பாக திமுக தலைவர் போட்டியிடும் கொளத்தூர், உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம், துரைமுருகன் போட்டியிடும் காட்பாடி, எவ வேலு போட்டியிடும் திருவண்ணாமலை மற்றும் கேஎன் நேரு போட்டியிடும் திருச்சி மேற்கு ஆகிய தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக தரப்பிலிருந்து புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த ஐந்து தொகுதிகளிலும் தேர்தல் ஒத்தி வைக்கப்படும் என்றும் அது போக ஒரு சில தொகுதிகளில் தேர்தல் ரத்தாக வாய்ப்பு இருப்பதாகவும் சமூகவலைதளங்களில் வதந்தி பரவியது.

இந்த நிலையில் சற்று முன்னர் பேட்டியளித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் தமிழகத்தில் நாளை 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் ஒரு சில தொகுதிகளில் தேர்தல் ரத்து என்று பரவி வரும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நாளை அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version