தமிழ்நாடு

ஓட்டு போட்ட பின்னர் அதிமுகவை கலாய்த்த வைகோ!

Published

on

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, இன்று தன் வாக்கைப் பதிவு செய்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும் போது, அதிமுகவை கடுமையாக விமர்சித்து கேலி செய்தார். 

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வரிசையில் நின்று வாக்களித்தார். 

தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், ‘வாக்குப்பதிவுக்காக வரிசையில் நிற்கும் மக்களின் முகங்களைப் பார்த்தேன். ஏழை, எளிய மக்கள், தினக்கூலி மக்கள் அதிகமாக வந்துள்ளனர். அவர்கள் முகத்தில் புன்சிரிப்பை கண்டேன். அவர்கள் என்னை வரவேற்பதைக் கண்டேன்.

திமுகவுக்கு மக்களிடம் பேராதரவு திரண்டிருப்பதைக் காண முடிந்தது. இந்தத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும். சங்கரன்கோவில் தொகுதியில் திமுக வேட்பாளர் ராஜா மிகப்பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. ஜனநாயகத்தின் தீர்ப்பு ஸ்டாலின் முதல்வர் என்ற தீர்ப்பாக அமையும்.

தமிழகத்தில் 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யக் கோரி அதிமுகவினர் அளித்த மனு குப்பைத்தொட்டிக்கு சென்றிருக்கும். தேர்தலில் அதிமுகவினர் படுதோல்வி அடைவார்கள்’ என்று உறுதிபட கூறினார். 

Trending

Exit mobile version