தமிழ்நாடு

ஒபாமாவுக்கு அடுத்து ஸ்டாலின் தான்: ஒரே போடாய் போட்ட வைகோ!

Published

on

ஒபாமாவுக்கு அடுத்து ஸ்டாலின்தான் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலினை ஆதரித்து நேற்று வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அமெரிக்காவில் ஒபாமா அவர்கள் ஆட்சியில் இல்லாதபோதும் இருந்தபோதும் மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டார். அதேபோல்தான் ஸ்டாலின் ஆட்சியில் இல்லாதபோதும் மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார். எனக்கு தெரிந்து உலக அளவில் ஒபாமாவை அடுத்து ஸ்டாலின் தான் சிறந்த தலைவர் என்று கூறினார்.


ஸ்டாலின் இந்த தொகுதியின் வேட்பாளராக இருப்பதை எண்ணி கொளத்தூர் மக்கள் பெருமைப் படவேண்டும் என்றும் அவர் கூறினார். ஒரு சிறந்த நிர்வாகி என்பதை பல முறை நிரூபித்திருக்கிறார் என்றும் அவர் மேயராக இருந்தபோது பல பாலங்களை கட்டியிருக்கிறார் என்றும் இந்தியாவிலேயே இது போன்ற ஒரு மேயரை யாரும் பார்த்ததில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

திமுக கூட்டணியில் உள்ள மதிமுக வரும் தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் மதிமுக வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்வதை விட ஸ்டாலின் தொகுதியில் பிரச்சாரம் செய்வதில் வைகோ முன்னுரிமை காட்டி இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Trending

Exit mobile version