தமிழ்நாடு

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வைகோ மனுத்தாக்கல்!

Published

on

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நீண்ட இடைவெளிக்கு பின்னர் பாராளுமன்றத்துக்கு செல்ல இருக்கிறார். திமுகவின் உதவியுடன் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று தலைமைச்செயலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

கடந்த மக்களவை தேர்தலின் போது மதிமுகவுக்கு ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கப்படும் என திமுக உடன்படிக்கை செய்துகொண்டது. அதன்படி திமுக அளித்த ஒரு ராஜ்யசபா உறுப்பினர் வாய்ப்பின் மூலம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராளுமன்றத்துக்கு செல்ல இருக்கிறார்.

இந்நிலையில் வைகோவுக்கு நேற்று தேசதுரோக வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வந்ததால் அவருக்கு ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் எம்பி ஆவதில் சிக்கல் ஏற்படுமா என குழப்பமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் வைகோ இன்று தலைமைச் செயலகத்தில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது மனுவை தாக்கல் செய்தார்.

இந்த வேட்புமனு தாக்கலின் போது ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, தமிழக நலனுக்காக மாநிலங்களவையில் என் கடமையைச் செய்வேன். சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் தேர்தலில் போட்டியிடும் தகுதி உள்ளதா என்பது வருகிற ஜூலை 9-ஆம் தேதி தெரியவரும் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version