சினிமா செய்திகள்

நான் 10 வருடமாக லாக்டவுனில் இருக்கின்றேன்: கண்ணீர் சிந்திய வடிவேலு

Published

on

தமிழ் திரையுலகில் நகைச்சுவையில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் வடிவேலு என்பதும் அவர் நடிக்காத படங்களில் இல்லை என்ற அளவில் சில ஆண்டுகள் திரையுலகம் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் வடிவேலு நகைச்சுவை இல்லாத மீம்ஸ்களை இல்லை என்பதும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவருடைய வசனங்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக அவர் திரையுலகில் தலைகாட்டாமல் உள்ளார். அவருக்கு தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவருக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை என்பதால் அவர் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வடிவேலு எனக்கு நடிக்க ஆசையாக இருக்கிறது என்றும் உடலிலும் தெம்பு இருக்கிறது என்றும் ஆனால் யாரும் தனக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்றும் கூறினார். மேலும் நீங்கள் அனைவரும் ஒரு வருடமாகத் தான் லாக்டவுனில் இருக்கிறீர்கள், ஆனால் நான் பத்து வருடமாக லாக்டவுனில் இருக்கிறேன் என்று கண்ணீருடன் அவர் கூறியது அனைவரையும் வேதனைக்குள்ளாக்கியது.

இந்த நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இனிமேலாவது அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவோம்.

seithichurul

Trending

Exit mobile version