சினிமா

வடசென்னையும் வெற்றிமாறனும்

Published

on

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்கள் மூலம் கவனம் ஈர்த்த தேசிய விருதும் பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் தற்பொழுது அவருடைய அடுத்த படமான ‘வடசென்னை’யின் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்.
சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. ‘கேஸ்ட்டிங் கௌச்’ பற்ற
 அவரிடம் கேட்டதற்கு, “பரஸ்பரம் புரிதலோடு இருவர் உறவு கொண்டால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லை. நீ என்னுடன் உறவு கொண்டால்தான் நான் உனக்கு வாய்ப்பளிப்பேன் எனக் கூறுவது முற்றிலும் தவறு” எனக் கூறினார்.
மேலும் ‘வடசென்னை’ என்றாலே ஏன் அங்குள்ளவர்கள் ரௌடிகள் என்றே சினிமாவில் காட்டப்படுகிறது? என்ற கேள்விக்கு, ” அது என்னவோ உண்மைதான். ஆனால் என்னுடைய ‘வடசென்னை’ அங்குள்ளவர்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் ” என்றார்.
‘வடசென்னை’யின் இறுதி கட்ட வேலைகள் தற்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. அதை மூன்று பாகங்களாக வெளியிடவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
seithichurul

Trending

Exit mobile version