Connect with us

இந்தியா

தடுப்பூசிக்குத் திண்டாடும் இந்தியா; மத்திய அரசு என்ன செய்கிறது? டிரெண்ட் ஆன ‘#Vaccine_enga_da_dei’

Published

on

நாட்டில் இன்று முதல் 18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் அது நடைமுறைக்கு வருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. தடுப்பூசிகள் கிடைப்பதில் நிலவும் தட்டுப்பாடு மற்றும் குழப்பங்கள் காரணமாக இப்படியான சந்தேகம் எழுந்துள்ளது.

தடுப்பூசி செலுத்துவது குறித்து இந்த வாரத் தொடக்கத்தில் தமிழக அரசு வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில் கூறியிருந்ததாவது:

இந்தியாவிலேயே அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்த முதல் மாநிலம் தமிழ்நாடு. கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தமிழ்நாடு அரசால் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் இலவச தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 55.51 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், வரும் மே 1 ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தவாறு, இலவசமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் தேவையான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கென, முதல் கட்டமாக 1.50 கோடி தடுப்பூசிகள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக கொள்முதல் செய்து வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் 18 வயது மேற்பட்டவர்களுக்கு தமிழகத்தில் இன்று முதல் தடுப்பூசி போடப்படுமா என்பது குறித்து மாநில சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ‘மத்திய அரசின் இணையதளத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிவு செய்திருந்தால், அது குறித்து மத்திய அரசுத் தரப்பு தான் விளக்கம் கொடுக்க வேண்டும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை நாம் ஒன்றரை கோடி தடுப்பூசி டோஸ்களுக்கு ஆர்டர் கொடுத்து விட்டோம். ஆனால், இதுவரை தடுப்பூசிகள் நமக்கு எப்போது கிடைக்கும் என்பது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து நமக்கு எந்த வித தகவல்களும் வரவில்லை. தடுப்பூசி நம் கைகளுக்கு கிடைக்கும் பட்சத்தில் தான் அதை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த முடியும். அதே நேரத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி நம்மிடம் கையிருப்பில் இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

இப்படி தடுப்பூசிக்கு நிலவும் பற்றாக்குறை குறித்து நடிகர் சித்தார்த், ‘வாக்ஸின் எங்கடா டேய்’ என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவை ஒட்டி, ‘#Vaccine_enga_da_dei’ டிரெண்ட் ஆகி வருகிறது.

தினபலன்11 seconds ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!