தமிழ்நாடு
தடுப்பூசி போடாதவர்கள் இங்கெல்லாம் செல்ல முடியாது: தமிழக அரசு அதிரடி!
தடுப்பூசி போடாதவர்கள் இனி பொது இடங்களில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தமிழக அரசு திடீரென அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தடுப்பூசி போடாதவர்கள் எங்கெங்கெல்லாம் செல்லக்கூடாது என்பது குறித்து தமிழக பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன்படி தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்கள், மார்க்கெட், தியேட்டர், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே மேற்கண்ட இடங்களுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தடுப்பூசியை குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வந்த போதிலும் இன்னும் ஒரு சிலர் தடுப்பூசி போடாமல் இருப்பதை அடுத்தே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி போடாதவர்கள் மார்க்கெட், தியேட்டர் ஆகிய இடங்களுக்கு செல்ல முடியாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதால் அனைவரும் தடுப்பூசி செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.