இந்தியா

கிழிந்த ஜீன்ஸ் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த முதல்வருக்கு கொரோனா தொற்று!

Published

on

சமீபத்தில் உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் கிழிந்த ஜீன்ஸ் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். தான் விமான பயணத்தில் சென்று கொண்டிருக்கும்போது தனக்கு அருகில் அமர்ந்திருந்த பெண் இரண்டு குழந்தைகளுடன் பயணம் செய்தார் என்றும் அவர் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து இருந்தார் என்றும் இவ்வாறு உடை அணியும் அவர் எப்படி மற்றவருக்கு முன்னுதாரணமாக திகழ முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.

முதல்வரின் இந்த கருத்துக்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்தன்ர. தமிழ் நடிகர் சத்யராஜின் மகள் கூட தனது கண்டனத்த தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தனது கருத்துக்கு மன்னிப்பு கோருவதாகவும் ஆனால் அதே நேரத்தில் ஜீன்ஸ் கிழிந்த ஜீன்ஸ் அணிவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் அவர்களுக்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கிழிந்த ஜீன்ஸ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஒரு சில தினங்களிலேயே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version