இந்தியா
முதல்வர் பதவியில் இருந்து விலக தயார்: திடீர் அறிவிப்பால் அரசியலில் பரபரப்பு
முதலமைச்சர் பதவியில் இருந்து விலக தயார் என மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அவர்கள் திடீரென அறிவிப்புச் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் சமீபத்தில் சிவசேனா கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் உத்தவ்தேவ் தாக்கரே கூட்டியபோது அதில் 20 சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்து கொண்டிருப்பதாகவும் எம்எல்ஏக்களை கடத்தி வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிவசேனா கட்சி எம்எல்ஏக்கள் விரும்பினால் எனது பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகவும் தனது ராஜினாமா கடிதத்தை எம்எல்ஏக்கள் இடமே கொடுக்க தயாராக உள்ளேன் என்றும் முதலமைச்சர் பதவியை விட எனக்கு மக்களின் அன்பே முக்கியமானது என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வீட்டில் இருந்துகொண்டே முதலமைச்சர் பணியை செய்து கொண்டிருக்கும் உத்தவ் தாக்கரே அவர்கள் திடீரென பதவியில் இருந்து விலக தயார் என அறிவிப்பு செய்துள்ளது மகாராஷ்டிரா மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.