இந்தியா

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 3 சுங்கச் சாவடிகளில் கட்டணம் ரத்து!

Published

on

கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து அங்குள்ள மூன்று நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் நுகர்வோர் கட்டணத்தை ரத்துச் செய்வதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

திரிச்சூர் மாவட்டம் பாலியக்கரா, பாலக்காடு மாவட்டம் பாம்பம்பள்ளம், கொச்சியில் கும்பளம் ஆகிய மூன்று சுங்கச் சாவடிகளில் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதல் நடைமுறையில் உள்ள கட்டண ரத்து வரும் 26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

கேரள மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பெய்த மழையாலும், பல்வேறு மாவட்டங்களில் அணைகள் திறக்கப்பட்டதாலும், ஆலுவா அருகே தேசிய நெடுஞ்சாலை 544 உட்பட ஏராளமான நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கேரள மக்களுக்கு ஆன்லைனில் நிதி அளித்து உதவ donation.cmdrf.kerala.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்க.

Trending

Exit mobile version