உலகம்

வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்ற மணமக்களை காணவில்லை.. 2 மணி நேரம் பதட்டத்திற்கு பின் டுவிஸ்ட்..!

Published

on

திருமண வரவேற்புக்காக நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற புதுமண தம்பதிகள் திடீரென காணாமல் போனதை அடுத்து மணமக்கள் விட்டார்கள் பதட்டம் அடைந்த நிலையில் திடீரென ஏற்பட்ட டுவிஸ்ட் அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் புதுமண தம்பதிகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இதனை அடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியை 5 நட்சத்திர ஹோட்டலில் நடத்த முடிவு செய்தனர். இந்த நிலையில் மணமகன் மணமகள் உறவினர்கள் நட்சத்திர ஓட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வந்திருந்த நிலையில் மணமக்களையும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

மணமகன் மணமகள் ஆகிய இருவரும் ஹோட்டலில் வாசல் வரை வந்துவிட்டனர் என்று தகவல் வந்த நிலையில் திடீரென இருவரையும் காணவில்லை. இதனை அடுத்து நட்சத்திர ஓட்டல் முழுவதும் உறவினர்கள் மணமக்களை தேடிய நிலையில் நீண்ட நேரம் கழித்து தான் அவர்கள் இருவரும் லிப்டில் மாட்டிக் கொண்டனர் என்று தெரியவந்தது.

கீழ் தளத்திலிருந்து 16-வது தளத்திற்கு லிப்டில் மணமக்கள் வந்து கொண்டிருந்தபோது திடீரென லிப்ட் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நின்று விட்டதாகவும் அதில் மணமகள் மணமகள் மாட்டிக்கொண்டதாகவும் தெரியவந்தது. இதனை அடுத்து லிப்ட் ஆபரேட்டர்கள் உடனடியாக லிப்டில் இருந்தவர்களை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் பல மணி நேரம் முயற்சி செய்தும் முடிய வில்லை என்பதை அடுத்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தீயணைப்படையினர் விரைந்து வந்து லிப்டின் மேல் பகுதியில் ஓட்டை போட்டு லிப்டின் உள்ளே இருந்த மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இருவரையும் கயிறு மூலம் மேலே இழுத்து காப்பாற்றினார்கள். மணமகள் மணமகள் மட்டுமின்றி மணமகளின் தோழியும் இந்த லிப்டில் சிக்கிக் கொண்டதை அடுத்து அவரையும் காப்பாற்றியதாக தெரிகிறது.

மணமக்களை காப்பாற்ற பல மணி நேரம் ஆனதை அடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version