உலகம்
இந்தியர்களுக்கு எச்-1பி விசா வழங்குவது குறைக்கப்பட வாய்ப்பு… ஐ.டி. ஊழியர்கள் அதிர்ச்சி!
நியூயார்க்: வெளிநாட்டினர் அமெரிக்காவில் வேலை செய்யப் பயன்படுத்தும் எச்-1பி விசா அனுமதியை இந்தியர்களுக்கு வழங்குவதைக் குறைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
வெளிநாட்டு நிறுவனங்களை உள்நாட்டிலேயே தரவுகளைச் சேமிக்கக் காட்டுப்பாடு விதிக்கும் நாட்டவர்களுக்கு எச்-1பி விசா வழங்குவதைக் குறைக்க உள்ளதாக அமெரிக்கா இந்தியாவிடம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் 85,000 வெளிநாட்டவர்கள் எச்-1பி விசா விதிமுறை கீழ் அமெரிக்காவில் பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த எச்-1பி விசாவை ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக 70 சதவீதம் வரை இந்தியர்களே பெறுகின்றனர்.
அமெரிக்க அரசு விதிக்க உள்ள இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தால் 85,000 எச்-1பி விசாக்களில் 10 முதல் 15 சதவீதம் வரையில் மட்டுமே இந்தியர்களுக்குக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்திய அரசு வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், மாஸ்ட்டர் கார்டு, விசா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களை உள்நாட்டிலேயே தரவுகளை சேமிக்க வேண்டும் என்று இந்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.