உலகம்

உலக போரை விட அதிகமான உயிரிழப்பு.. அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாகிய புதிய ஆய்வு முடிவுகள்!

Published

on

நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை 3 போர்களின் போது அமெரிக்காவில் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையை விட அதிகம் என்பது அதிர்ச்சியளிக்க கூடிய செய்தியாக உள்ளது.

2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் ஒரு மர்ம வைரஸ் பரவி வருவதாக செய்தி வெளியான போது உலகின் ராஜாவாக இருக்கும் அமெரிக்கா தான் மோசமாக பாதிக்கப்பட உள்ளதை நிச்சயம் அறிந்திருக்காது. உலகிலேயே கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்காவில் தான் அதிகம். அதேபோல உயிரிழப்பும் அங்கு மிக அதிக அளவில் உள்ளது.

அங்கு இதுவரை 28 மில்லியன் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இரண்டாம் உலக போரின் போதே அமெரிக்காவில் 405,000 பேர் தான் உயிரிழந்தனர், மற்றும் வியட்நாம் போரின் போது 58,000 பேரும், கொரிய போரின் போது 36,000 பேர் உயிரிழந்தனர். ஆனால் இந்த எண்ணிக்கைகளை விட கொரோனாவில் ஏற்பட்ட உயிரிழப்பு அதிகமாகவே உள்ளது. இன்னும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது.

இந்த எண்ணிக்கை என்பது உலகம் முழுவதிலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் 20 சதவிகிதத்தை கொண்டுள்ளது. உலகம் முழுவதிலும் 25 லட்சம் பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

வேகமாக உயர்ந்த உயிரிழப்பு:

2020 ஜனவரி இறுதியில் அமெரிக்காவுக்குள் கொரோனா பாதிப்பு ஏற்பட தொடங்கியிருந்தாலும் பிப்ரவரியில் தான் முதல் உயிரிழப்பு ஏற்பட்டது. அடுத்து 4 மாதங்களுக்கு பிறகு ஜூன் மாதத்தில் தான் உயிரிழப்புகள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியது. ஆனால் அதன் பின்னர் செப்டம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது. பின்னர் டிசம்பரில் 3 லட்சமாக உயர்ந்த எண்ணிக்கை அடுத்த ஒரு மாதத்திலேயே 4 லட்சமாக அதிகரித்துள்ளது. ஐந்து லட்சமாக உயரவும் அடுத்த ஒரு மாத காலம் மட்டுமே எடுத்துக்கொண்டது.

Also Read: இந்தியாவில் புதிய ‘உருமாறிய கொரோனாவால்’ 7,000 பேர் பாதிப்பு: அதிர்ச்சி ரிப்போர்ட்!

இப்படி மிக வேகமாக அதிகரித்த கொரோனா உயிரிழப்புகள் கடந்த சில நாட்களாக குறைய தொடங்கியுள்ளது. ஜனவரியில் ஒரு நாளைக்கு சராசரியாக 4000 என்கிற அளவில் இருந்த உயிரிழப்புகள் இப்போது 1900 ஆக குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை கூறிய காரணம் அமெரிக்காவில் அதிக அளவிலான தடுப்பூசிகள் போடுவது கிடையாது, மாறாக மக்கள் குளிர் காரணமாக வீடுகளிலேயே தங்கியிருப்பதும், முக கவசங்களை முறையாக அணிவதால் தான் என்கின்றனர் நிபுணர்கள்.

இருப்பினும் மாற்றமடையும் புதிய வகை கொரோனா வைரஸ்கள் இந்த எண்ணிக்கையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பனி, மற்றும் வானிலை தொடர்பான மின் தடைகள் காரணமாக சில பகுதிகளில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் தெற்கு பகுதிக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதும் தடைபட்டுள்ளது.

இதுவரை 44 மில்லியன் அமெரிக்கர்கள் குறைந்த பட்சம் தங்களது முதல் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர். கடந்த ஏழு நாட்களில் எடுக்கப்பட்ட தரவுகளின் படி ஒரு நாளைக்கு கூறிவந்த பட்சம் 1.6 மில்லியன் அமெரிக்கர்கள் கொரோனா தடுப்பூசிகளை பெறுகின்றனர்.

இதுவரை ஃபைசர் மற்றும் மாடெர்னா நிறுவனங்களின் தடுப்பூசிகளை அனுமதி வழங்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இவற்றுடன் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டால் தடுப்பூசி வழங்கும் அளவு கணிசமாக உயரும் என்றும் ஜூன் இறுதிக்குள் 100 மில்லியன் தடுப்பூசி வழங்கப்பட்ட அளவை எட்ட வேண்டும் என்கிற அமெரிக்க அரசின் இலக்கை அடைய முடியும் என்றும் அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version