சினிமா

உறியடி விஜய்குமாரின் புதிய பட அறிவிப்பு- ட்விட்டரில் குவியும் வாழ்த்துகள்..!

Published

on

உறியடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் சாதனை படைத்து வரும் இளம் இயக்குநராக அங்கீகாரம் பெற்றார் நடிகர் விஜய்குமார். இவரது 3-வது திரைப்படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

உறியடி திரைப்படம் மூலம் இயக்குநர் மற்றும் நடிகர் ஆக அறிமுகம் ஆனவர் விஜய்குமார். இவரது முதல் படத்துக்குக் கிடைத்த அங்கீகாரத்தின் மூலம் உறியடி இரண்டாம் பாகம் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. நடிகர் சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வழங்கியது. தொடர்ந்து இளம் இயக்குநர்களுக்கு சவாலாக இருந்து வரும் விஜய்குமார் புதிய படம் ஒன்றில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

உறியடி இரண்டு பாகங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அப்பாஸ் ரகமத் இப்புதிய படத்தை இயக்குகிறார். ரீல் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளியாக உள்ள தனது மூன்றாவது படத்திற்கான அறிவிப்பை விஜய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version