தமிழ்நாடு
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியா? தனித்து போட்டியா? விஜயகாந்த் அறிவிப்பு!
சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் அக்கட்சியின் கூட்டணியும் நல்ல வெற்றியைப் பெற்றது என்பதும் தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும் தோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலை அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதாகவும் அதற்கான முழு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் கவனித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தொடர்ந்த கூட்டணி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தொடருமா? என்ற எழுந்துள்ளது. ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்ட நிலையில் தற்போது தேமுதிகவும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்றும் வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
எனவே வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பலமுனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.