செய்திகள்

உபர் சூப்பர் ஸ்டார்: யார் இந்த சூப்பர் ஸ்டார்? காரணம் என்ன? அப்படி என்ன செஞ்சாருன்னு நீங்களே பாருங்க.!

Published

on

அண்மையில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து அதிக செய்திகள் பரவிவருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆண்களே, பெண்களுக்கு ஆபத்தாக வந்து நிற்கிறார்கள் என்பது தான் கொடுமை.

அனால் அதே ஆண்கள் பெண்களுக்கு பாதுகாப்பாகவும் இருக்கிறார்கள் என்பதற்கு சான்றாகவும், பல நிகழ்வுகள் நடந்துகொண்டு தன் இருக்கிறது. ஏனோ நம் கண்களுக்கு அது தெரியாமலே போய் விடுகிறது.

நள்ளிரவு ஒரு மணியளவில் கொல்கத்தாவை சேர்ந்த ப்ரியாஷ்மிதா குஹா என்ற பெண் தன் தாயுடன் ஊபர் டாக்ஸி மூலம் தன் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டின் கதவு உட்புறமாக தாழிடப்பட்டிருந்த நிலையில், அவர்கள் இருவரும் வெளியே காத்திருந்தனர். இதை கவனித்த டாக்ஸி ஓட்டுநர், இருவரும் வீட்டிற்குள் செல்லும் வரை அவர்களுக்கு பாதுகாப்பாக காத்திருந்திருக்கிறார். சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து, அவர்கள் உள்ளே சென்ற பின்னரே அங்கிருந்து கிளம்பியுள்ளார்.

இந்த சம்பவத்தால் நெகிழ்ந்து போன ப்ரியாஷ்மிதா குஹா தன் டிவிட்டர் பக்கத்தில், இந்த சம்பவத்தை பதிவு செய்து  ஊபர் நிறுவனம் மற்றும் அந்த ஓட்டுனருக்கு “ஊபர் ஸ்டார்” என்று சொல்லி தனது நன்றியை பகிர்ந்துள்ளார். இந்த பதிவை தொடர்ந்து பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

 

seithichurul

Trending

Exit mobile version