இந்தியா

95% மக்களுக்கு பெட்ரோல், டீசல் தேவையில்லை: விலையுயர்வு குறித்து விளக்கமளித்த அமைச்சர்!

Published

on

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது என்பதும் பெட்ரோல் விலை நூறு ரூபாயை தாண்டி உள்ளது என்பதும் டீசல் விலை 100 ரூபாயை தொட்டு விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில் உபி மாநிலஅமைச்சர் ஒருவர் பெட்ரோல் விலை குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே 95 சதவீத மக்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் தேவைப்படாது என்று கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அமைச்சர் உபேந்திர திவாரி என்பவர் இது குறித்து மேலும் கூறியபோது இந்தியாவில் வெறும் 5 சதவீத மக்களே நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் பயன்படுத்துகிறார்கள் என்றும் அவர்களுக்கு மட்டும்தான் பெட்ரோல் தேவைப்படுகிறது என்றும் 95 சதவீத மக்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் தேவைப்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் டீசல் விலை உயர்வால் வாகன வாடகை விலை உயரும் என்றும் அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்பதையும் செய்தியாளர்கள் சுட்டிக்காட்ட போது அவர் அதனை கண்டு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனிநபர் வருமானத்தை ஒப்பிடும்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியாவில் குறைவாகவே உள்ளது என்றும் அவர் தெரிவித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version