Connect with us

இந்தியா

உத்தர பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி போட்டவர் பலி!

Published

on

உத்தர பிரதேச மாநிலத்தில், 46 வயதுடைய சுகாதார ஊழியருக்கு நேற்று முன் தினம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்ட 24 மணி நேரத்திற்குள் அந்த நபர் இறந்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

உத்தர பிரதேசத்தின் மொராதாபாத்தில் இருக்கும் மருத்துவமனையில் வார்டு பாயாக பணி செய்து வந்தவர் மகிபால் சிங். அவருக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இது குறித்து மொராதாபாத் தலைமை மருத்து அதிகாரி எம்.சி.கார்க் கூறுகையில், ‘சனிக்கிழமை அவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பின்னர், ஞாயிற்றுக் கிழமை மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. நெஞ்சு வலியும் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் இறந்துள்ளார். அவரது மரணத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை செய்து வருகிறோம். விரைவில் பிரேதப் பரிசோதனை முடிவு எங்கள் கைகளுக்கு வரும். அவர் தடுப்பூசி காரணமாக இறந்துள்ளதாக எங்களுக்குத் தோன்றவில்லை’ என்று கூறியுள்ளார்.

அதே நேரத்தில் மகிபால் சிங்கின் மகன், ‘தடுப்பூசி போடுவதற்கு முன்னரே என் தந்தையின் உடல் நிலை சற்று குறைபாடுகள் உடன் தான் இருந்தது. ஆனால் தடுப்பூசி போட்ட பின்னர் அவர் அதிக உடல் உபாதைகளை அனுபவித்தார்’ என்று அதிர்ச்சிகர தகவலைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி போட்ட நிறைய பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கொரோனா தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவில் பயன்பாட்டுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ள இரண்டு தடுப்பூசிகளில் கோவாக்ஸின் என்கிற தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் கிளப்பப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் தடுப்பூசி போட்டதால் ஒருவர் உயிரிழந்திருக்கலாம் என்கிற செய்தி மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இந்தியா58 நிமிடங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்1 மணி நேரம் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா2 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!