இந்தியா

மோடியால் நஷ்டம்: ஃபேஸ்புக் லைவில் விஷம் குடித்த தம்பதிகள்!

Published

on

பிரதமர் மோடியின் தவறான பொருளாதாரக் கொள்கையால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறிய வியாபாரி ஒருவர் தனது மனைவியுடன் ஃபேஸ்புக் லைவில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராஜீவ் தோமர் என்பவர் ஷூ கடை நடத்தி வருகிறார். அவருக்கு கடந்த சில ஆண்டுகளாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கடனுக்கு ஆளான இவர் தனது மனைவியுடன் தற்கொலை செய்ய முடிவு செய்து பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் நான் இறந்தால் இந்த வீடியோவை பார்ப்பவர்கள் அனைவருக்கும் பகிருங்கள். நான் இந்த நாட்டுக்கு எதிரானவன் அல்ல, ஆனால் அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் சிறு வியாபாரிகள் கொள்கையால் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளானேன். தயவு செய்து உங்கள் கொள்கையை மாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறி மனைவியுடன் விஷம் குடித்த காட்சியை அதில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து காவல்துறையினருக்கு இந்த வீடியோவில் பார்த்தவர்கள் தகவல் அளித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று விஷம் குடித்த இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் ராஜீவ் குமார் மட்டும் சிகிச்சையின் பலனாக பிழைத்துக் கொண்டார் என்றும், ஆனால் அவரது மனைவி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக கூறப்படுகிறது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, ஊரடங்கு உள்பட பல்வேறு மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள்தான் அவரது தற்கொலை முயற்சிக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version