தமிழ்நாடு

டிசம்பர் 3ம் தேதி முதல் முன்பதிவு இல்லாத பெட்டிகள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Published

on

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்த காரணத்தினால் போக்குவரத்துகள் பல மாதங்கள் தடைபட்டது என்பதும் குறிப்பாக முக்கிய ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது என்பதும் ஒரு சில சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமின்றி ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளும் இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து மீண்டும் ரயில்களில் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருவதாக ரயில்வே துறை அறிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தெற்கு ரயில்வே ஏற்கனவே ஒரு சில முக்கிய ரயில்களில் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளை இணைத்துள்ள நிலையில் தற்போது மேலும் மேலும் ஆறு ரயில்களில் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் 3ஆம் தேதி முதல் இந்த ரயில்களில் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் இணைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது

தற்போது முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ள ரயில்களின் விவரம் பின்வருமாறு:

1. வண்டி எண் 12639: சென்னை சென்ட்ரல் – பெங்களூரு பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்

2. வண்டி எண்: 12675: சென்னை சென்ட்ரல் – கோவை எக்ஸ்பிரஸ்

3. வண்டி எண் 16854: விழுப்புரம் – திருப்பதி எக்ஸ்பிரஸ்

4. வண்டி எண் சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ்

5. வண்டி எண் 16057 : சென்னை சென்ட்ரல் – திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ்

6. வண்டி எண்: 56640: மங்களூர் சென்ட்ரல் – மேட்கான் பாசஞ்சர்

மேற்கண்ட ஆறு ரயில்களில் மறு மார்க்கமாக செல்லும் ரயில்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version