இந்தியா
கல்லூரி 1-ம் மற்றும் 2-ம் ஆண்டு தேர்வுகளைப் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் நடத்திக்கொள்ளலாம்.. உச்ச நீதிமன்றம்!
கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகளைப் பலகலைக்கழகங்கள் விரும்பினால் நடத்திக்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதற்கு எதிராக டெல்லியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் பொதுநல வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு, செமஸ்டர் தேவுகளை நடத்திக்கொள்ள யுஜிசி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி விரைவில் கல்லூரி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் நடைபெற உள்ளன.
எனவே முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளைப் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் நடத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்த நீதிபதிகள் பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என்று ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கல்லூரி இறுதி ஆண்டு தேர்வு தவிர பிற செமஸ்டர் தேவுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதைப் பல்கலைக்கழகங்கள் முடிவு செய்யுமா, அல்லது தமிழக அரசின் முடிவை பல்கலைக்கழகங்கள் ஏற்குமா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.