உலகம்

மியான்மரில் முடக்கப்பட்ட இணையம்.. உலக நாடுகளை ஒன்றிணைக்கும் ஐநா.. சிக்கலில் ராணுவம்

Published

on

மியான்மரில் ஆட்சிக்கவிழ்ப்பை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட தொடங்கியுள்ள நிலையில் அந்நாட்டில் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அங்கு நிலைமை மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப உலக நாடுகள் அனைத்தையும் ஒன்றிணைக்க தயார் என்று ஐநா கூறியுள்ளது.

மியான்மரில் கடந்த திங்கட்கிழமை ராணுவம் ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்டது. கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஆங் சாங் சூகியின் என்.எல்.டி கட்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக ராணுவம் தரப்பில் சாட்டப்பட்டது. தான் கடந்த திங்கட்கிழமை திடீரென மியான்மர் ராணுவம் அங்கு ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டது.

ஆங் சாங் சூகி மற்றும் ஜனாதிபதி ஆகியோரை வீட்டுக்காவலில் வாய்த்த ராணுவம் அடுத்த ஒரு ஆண்டுக்கு அவசர நிலையை பிரகடனப்படுத்துவதாக அறிவித்தது. இதனால் மியான்மர் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது. மேலும் என்.எல்.டி கட்சி சார்பில் நியமிக்கப்பட்ட அமைச்சர்களை நீக்கிவிட்டு புதியதாக அமைச்சரவையும் அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.

YANGON, MYANMAR – FEBRUARY 02: An armed soldier stands guard in front of a Hindu temple in the downtown area in Yangon, Myanmar on February 02, 2021. Myanmar’s military announced Monday that it has seized power and will rule the country for at least one year after detaining its top political leaders. (Photo by Stringer/Anadolu Agency via Getty Images)

இதற்கிடையே அங்கு மக்கள் வெடித்துள்ளது. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகியை விடுவிக்கக் கோரி ஆயிரக்கணக்கான மக்கள் யாங்கோனின் வீதிகளில் இறங்கி போராடி வருகிறார்கள். ராணுவ சர்வாதிகார ஆட்சி ஒழிக, ஜனநாயக ஆட்சி வெல்க என கோஷங்களுடன் பல்வேறு ஆர்வலர்கள் போராடி வருகின்றனர். போராட்டம் தொடங்கியதில் இருந்து வலைத்தளங்கள் மூலம் மக்கள் ஒருங்கிணைக்கப்பட்டனர். இதனால் பல இடங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டது. மேலும் சில பகுதிகளில் வழக்கத்தை விட 54% இணைய வேகம் குறைந்துள்ளதாக கூறியுள்ளனர். கொரோனா தொற்று சமயத்தில், ஆட்சிக்கவிழ்பு திட்டத்தை நடத்தி, இணையதளத்தை முடக்குவது என்பது கொடூரமான மற்றும் பொறுப்பற்ற செயல் என அம்னஸ்டி இன்டர்நேஷனலின் பிரச்சாரங்களுக்கான துணை பிராந்திய இயக்குனர் மிங் யூ ஹா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஐக்கிய நாடுகள் சபை மியான்மரில் இராணுவத்துடன் முதல் தொடர்பைக் கொண்டுள்ளது என்று பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் தெரிவித்தார், பொதுமக்கள் மற்றும் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். எங்கள் சிறப்பு தூதர் இன்று ராணுவத்துடன் தொடர்பு கொண்டிருந்தார், அதில் அவர் துணை இராணுவத் தளபதியிடம் எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தினார். இந்த சதி தலைகீழாக மாற்றுவதற்கான நிலைமைகள் உருவாக்கப்படுவதை உறுதி செய்வதில் சர்வதேச சமூகத்தை ஒன்றிணைக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். இது நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் குடெரெஸ் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version