ஆட்டோமொபைல்

இந்தியாவின் முதல் ஓட்டுநர் இல்லா பயணிகள் ட்ரோன் வருணா அறிமுகம்!

Published

on

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இந்தியாவின் முதல் ஓட்டுநர் இல்லா பயணிகள் ட்ரோன் வருணா குறித்து டிவிட்டரில் பதிவிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

நாம் இதுவரையில் டிரோன் என்றால் கேமரா, விரைவில் ஆன்லைன் ஆர்டர்களை டெலிவரி செய்ய பயன்படுத்தப்படும் என நினைத்து வந்த நிலையில் இப்போது பயணிகளைக் கொண்டு செல்லவும் பயன்படுத்தலாம் என்பது போல இந்த விடியோ உள்ளது.

வருணா பயணிகள் ட்ரோன் குறித்து டிவிட்டரில் பதிவிட்ட மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, “இது 130 கிலோ எடையை 25 கிலோ மீட்டர் வரை கொண்டு செல்லும்” என தெரிவித்துள்ளார்.

இப்போது இந்த வருணா பயணிகள் ட்ரோன் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த ட்ரோன் பிரதமர் மோடி முந்நிலையில் வானில் பறக்கவிடப்பட்டு காண்பிக்கப்பட்டது.

Trending

Exit mobile version