இந்தியா
மத்திய அரசின் முடிவால் மாநில போக்குவரத்துத் துறைகளுக்கு வந்த புது சிக்கல்!
மத்திய அரசு, அரசு அலுவலகங்கள், துறைகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள மோட்டர் வாகனங்களை ஸ்கிராப் செய்யத் திட்டமிட்டுள்ளது.
எனவே, மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய அரசு சார்ந்த போக்குவரத்துத் துறைகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாட்டில் உள்ள வாகனங்களை ஸ்கிராப் செய்ய உள்ளனர்.
மேலும் மாநில அரசுகளும் 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாட்டில் உள்ள மோட்டார் வாகனங்களை 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் ஸ்கிராப் செய்ய வேண்டும் என மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
எனவே அனைத்து மாநில அரசுகளும் விரைவில் தங்களது துறைகள், அரசு அலுவலகங்கள், போக்குவரத்துத் துறைகளில் உள்ள மோட்டார் வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கு அதிகமாக பயன்பாட்டில் இருந்தால், ஸ்கிராப் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இப்படி பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்வதன் மூலம் காற்று மாசு, இரைச்சலால் ஏற்படும் மாசு மற்றும் விபத்துகள் குறையும் எதிர்பார்க்கப்படுகிறது.
தனியார் வாகனங்களுக்கு இந்த ஸ்கிராப்பிங் விதி இப்போதைக்கு பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.