வணிகம்

மத்திய அரசின் இந்த ஒரு திட்டத்தால் 1,00,000 வேலைவாய்ப்புகள்.. அதில் தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா? எப்படி?

Published

on

சென்னை: மத்திய அரசு இந்தியாவில் தங்களது தயாரிப்புகளை உற்பத்தி செய்ய வரும் நிறுவனங்களுக்கு உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் என்பதைச் செயல்படுத்தி வருகிறது.

கடந்த 19 மாதத்தில் ஆப்பிள் நிறுவனத்தால் மட்டும் இந்தியாவில் 1,00,000 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

iPhone, assembler, Foxconn, invests, Rs 1500 crore, Chennai unit, சென்னை, ஐபோன், உற்பத்தி, ரூ1500 கோடி, முதலீடு, ஃபாக்ஸ்கான்

ஃபாக்ஸ்கான் சென்னை

அதில் 49,000 வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. 35,000 வேலைவாய்ப்புகள் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்திலும், 14,000 வேலை வாய்ப்புகள் சென்னை மகேந்திரா சிட்டியில் உள்ள பெகட்ரான் நிறுவனத்திலும் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும் டாடா எலக்ட்ரானிக்ஸ், மற்றும் சால்காம்ப் நிறுவனங்கள் ஓசூரில் தங்களது ஐபோன் உற்பத்தி ஆலையை நிறுவி அங்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ஐபோன் உற்பத்தியில் பணிக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்களில் பெரும்பாலனவர்கள் ஜார்கண்ட் உள்ளிட்ட வெளிமாநிலத்தைச் சேர்ந்த பெண்களே அதிகம் என செய்திகள் வெளியாகி அதுவும் சர்ச்சையாகி வருகிறது.

தமிழ்நாட்டில் அமைக்கப்படும் ஒரு ஆலையில் தமிழர்களுக்கு முன்னுரிமை இல்லை என்று பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த வேலைவாய்ப்புகள் அனைத்தும் ப்ளூ காலர் வேலைவாய்ப்புகள்.ப்ளூ காலர் பணி என்றால் அது கட்டிட வேலை, இயந்திர ஆபரேட்டர், மில்ரைட், அசெம்பிளர் மற்றும் டிரக் டிரைவர் போன்றவை ஆகும். இந்த வேலையை செய்ய 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படித்தவர்களே பெரும்பாலும் தேவை. தமிழ்நாட்டில் பெரும்பாலன இளைஞர்கள் குறைந்தது ஒரு பட்டப்பட்டிப்பு படித்துள்ளதால் இந்த வேலையைகளை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை எனவும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version