பர்சனல் ஃபினான்ஸ்

மகிழ்ச்சி.. புதிய வருமான வரி முறை கீழ் இந்த 10 வருமானங்களுக்கு வரி விலக்கு உண்டு!

Published

on

அடுத்த நிதி ஆண்டு முதல் வருமான வரி செலுத்துபவர்கள் புதிய வருமான வரி முறையைத் தேர்வு செய்தால், பழைய வருமான வரி முறையில் உள்ள 70 வரி விலக்குகளைப் பெற முடியாது. இது பட்ஜெட் அறிவிப்பின் போது பலருக்கும் ஏமாற்றமாக இருந்தது.

எனவே இங்கு புதிய வருமான வரியின் கீழ் அடுத்த நிதியாண்டு முதல் எந்த வருமானத்திற்கு எல்லா வரி விலக்குகளைப் பெறலாம் என்பதில் 10-ஐ இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி

ஈபிஎப் என அழைக்கப்படும், வருங்கால வைப்பு நிதி கணக்கைத் தொடர்ந்து 5 ஆண்டுகள் வரை பயன்படுத்திய பிறகு எடுக்கும் பணத்திற்கு வரி விலக்கு பெற முடியும்.

பொது வருங்கால வைப்பு நிதி

பிபிஎப் கணக்கில் ஆண்டு தோறும் வரவு வைக்கப்படும் வட்டி தொகைக்கு புதிய வருமான வரி முறையின் கீழ் வரி விலக்கு பெறலாம்.

என்பிஎஸ் – தேசிய பென்ஷன் திட்டம்

தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்த பணத்தை முதிர்வு காலம் பிறகு திரும்பப் பெறும் போது அல்லது இடையில் வெளியேறும் போது 40 சதவீதம் வரை தொகைக்கு வரி விலக்கு பெறலாம். என்பிஎஸ் திட்டத்தில் உள்ள பணத்தில் சொற்பமான தொகையை மட்டும் வெளியில் எடுக்கும் போது 25 சதவீதம் வரையிலான முதலீட்டாளரின் பங்களிப்புக்கு வரி விலக்கு கிடைக்கும்.

பணிபுரியும் நிறுவனத்தின் சார்பாக ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியிலிருந்து வழங்கப்படும் 10 சதவீத பங்களிப்புக்குத் தொடர்ந்து வரி விலக்கு பெறலாம்.

எல்ஐசி – ஆயுள் காப்பீடு திட்டம்

வருமான வரி சட்டப் பிரிவு 10-ன் கீழ், வரி விலக்கு அளிக்கும் ஆயுள் காப்பீடு திட்டங்களின் முதிர்வு போனஸ் அல்லது சரண்டர் தொகைக்கு வரி விலக்கு பெறலாம். முதிர்வு தொகைக்கு எப்போதும் போல வரி விலக்கு உண்டு.

செல்வ மகள் திட்டம் – சுகன்யா சம்ரிதி யோஜனா

செல்வ மகள் திட்டம் என அழைக்கப்படும் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் முதிர்வு தொகை மற்றும் வட்டி தொகைக்கு வரி விலக்கு கிடைக்கும்.

பயணப்படி

ஊழியர்களுக்கு வழங்கப்படும் பயணப்படிகளுக்கு வரி இல்லை.

அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டம்

அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள தொகைக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் வட்டி தொகைக்கு ரூ.3,500 வரை வரி விலக்கு தொடர்ந்து கிடைக்கும்.

உதவித்தொகை

படிப்பு செலவிற்காக வழங்கப்படும், ஸ்காலர்ஷிப் என அழைக்கப்படும் உதவித் தொகைக்கு வருமான வரி சட்டப் பிரிவு 10 (16) கீழ் வரி விலக்கு உண்டு.

கிராஜூவிட்டி

ஒரு நிறுவனத்தில் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு அதிகமாகத் தொடர்ந்து பணியாற்றிய பிறகு வழங்கப்படும் கிராஜூவிட்டி வரி விலக்கு வழங்கப்படும்.

விடுப்பு

ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்த பிறகு வெளியேறும் போது, அல்லது ஓய்வு பெறும் போது, பே லீவ் என்பதன் கீழ் மிச்சம் உள்ள நாட்களுக்குப் பணம் பெறும் போது 3 லட்சம் ரூபாய் வரையிலான தொகைக்கு வரி விலக்கு பெறலாம்.

seithichurul

Trending

Exit mobile version