Connect with us

இந்தியா

இந்தியாவில் உள்ள 3700 அணைகளுக்கு ஆபத்து.. ஐநா எச்சரிக்கையால் பரபரப்பு!

Published

on

இந்தியாவிலுள்ள 3700 அணைக்கு ஆபத்து என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவிலிருக்கும் 3,700 அணைகள் வரும் 2050ஆம் ஆண்டுக்குள் 25 சதவீத நீரைத் தேக்கும் திறனை இழந்து விடும் என்றும் வண்டல் மண் கலப்பினால் இந்த ஆபத்து வர வாய்ப்பிருப்பதாகவும் ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.

50 ஆண்டுக்கு மேலான பழமையான அணைகள் தனது நீரை நிறுத்தும் அளவில் 30 சதவீத இழந்துவிடும் என்று கூறியுள்ள ஐநா, உலகம் முழுவதும் வண்டல் மண் பிரச்சனை காரணமாக சுமார் 50 ஆயிரம் அணைகள் தங்களது நீர்த்தேக்க அளவை 13 முதல் 19 சதவீதம் வரை இழந்துவிட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

ஐநாவுடன் இணைந்து சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார மைய பல்கலைக்கழகம் இது குறித்து நடத்திய ஆய்வில் உலக அளவில் இருக்கும் அணைகளின் எதிர்காலம் பற்றி சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் பெரிய அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்குவதை ஒரு பகுதியாக செயல்படுகின்றன என்றும் இந்த நீர்த்தேக்க அளவு ஒரே நேரத்தில் பாதிக்கும் வகையில் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.

2050 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள 3,700 அணைகள் மொத்த சேமிப்பில் 26 சதவீதத்தை இழக்கும், இது எதிர்காலத்தில் நீர் பாதுகாப்பு, நீர்ப்பாசனம் மற்றும் மின் உற்பத்தியை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வண்டல்களின் குவிப்பு காரணமாக, ஐக்கிய நாடுகள் சபையின் புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.

நீர், சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம் பற்றிய ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி, 150 நாடுகளில் உள்ள 47,403 பெரிய அணைகளில் 6,316 பில்லியன் கன மீட்டர் நீர் சேமிப்பு அளவு குறையும் என்றும், 4,665 பில்லியன் கியூபிக் மீட்டர், 2050ல் 26 சதவீத சேமிப்பு இழப்பை ஏற்படுத்தும் என்றும் கணித்துள்ளது.

இந்தியா மட்டுமின்றி சீனா, இந்தோனேசியா, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் அணைகளின் நீர்த்தேக்க அளவு குறைய வாய்ப்பு இருப்பதாகவும், அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில், ஆசிய-பசிபிக் பகுதி மற்றும் உலகின் அதிக சேமிப்புத் திறனில் 13 சதவீதத்தை இழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதி உலக மக்கள்தொகையில் 60 சதவீதத்தை கொண்டுள்ளதால் நீர் மற்றும் உணவு பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்கு நீர் சேமிப்பு முக்கியமானது என்றும், அந்த ஆய்வு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவின் 3,700 பெரிய அணைகள் 2050 ஆம் ஆண்டுக்குள் அவற்றின் ஆரம்ப மொத்த சேமிப்பில் சராசரியாக 26 சதவீதத்தை இழந்துவிடும் என்று கூறியுள்ள ஐநா, இந்தியா மட்டுமின்றி உலகின் அதிக அணைகள் உள்ள நாடான சீனாவில் உள்ள அணைகளும் 2050 ஆம் ஆண்டில் 10 சதவீத நீர்த்தேக்கத்தை இழக்கும் என்று கூறியுள்ளது.

நீர் சேமிப்பு உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கியமானது என்பதால் பெரிய அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் நீர்மின்சாரம், வெள்ளக் கட்டுப்பாடு, நீர்ப்பாசன முறைகளை சீர்செய்ய வேண்டும் என்றும் குறிப்பாக வண்டல் மண் குவிப்பை தடுக்க முயற்சிக்க வேண்டும் என்றும், அந்த ஆய்வு முடிவு அறிவுறுத்தியுளது.

author avatar
seithichurul
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்21 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு23 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!