உலகம்
18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற கூடாது: உக்ரைன் அதிபர் உத்தரவு!
![ukraine president - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/02/ukraine-president.jpg)
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ள நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேற தடை என உக்ரைன் அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் முதல் நாள் போரில் 137 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அதிபர் செலன்ஸ்கி அறிவித்தார். மேலும் ராணுவத்தை எதிர்த்து மக்கள் தயாராக வேண்டும் என்றும் போருக்கு தயார் என்று வரும் அனைவருக்கும் ஆயுதங்கள் அளிக்க வேண்டும் என்றும் உக்ரைன் அதிபர் தெரிவித்தார்.
இந்த நிலையில் ரஷ்ய ராணுவம் குண்டுமழை பொழிந்து வருவதால் உக்ரைன் நாட்டில் இருந்து பொது மக்கள் வெளியேற முயற்சித்து வருகின்றனர். இதனை அடுத்து 18 முதல் 60 வயது உடைய ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேற தடை என்றும் 18 வயதுள்ள சிறுவர்களும் அறுபது வயதுக்கு மேலான முதியோர்கள் மட்டுமே பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டை விட்டு வெளியேறலாம் என்று அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் ரஷ்யாவை எதிர்க்கஎத்தனை பேர் வந்தாலும் அவர்களுக்கும் ஆயுதம் தரப்படும் என்றும் உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது