உலகம்

குடியரசு தினத்திற்கு சிறப்பு விருந்தினராக இந்தியா வருகை தரும் இங்கிலாந்து பிரதமர்!

Published

on

குடியரசு தினத்தையொட்டி சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வரவுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு மற்றும் சுதந்திர தின கொண்டாட்டத்தில், சிறப்பு விருந்தினராக வெளிநாட்டு தலைவர்களை பிரதமர் மோடி இந்தியா அழைத்து வருகிறார். அந்த வகையில், 2021 ஆம் ஆண்டு, அதாவது வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்திற்கு, சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும்படி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார். இந்த தகவலை அந்நாட்டு வெளிநாட்டு தூதர்  அறிவித்துள்ளார். முன்னதாக இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போரிஸ் ஜான்சன் இந்தியா வருவதால், இருநாடுகளும் வர்த்தகம், பாதுகாப்பு, பயங்கரவாதத்தை கட்டுக்குள் கொண்டு வருதல் போன்றவற்றில் இணைந்து செயல்படாலம். இருநாடுகளுக்கும் இடையே சுமூகமான உறவு ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

seithichurul

Trending

Exit mobile version