உலகம்
இந்திய குடியரசு தினத்திற்கு இங்கிலாந்து பிரதமர் வாழ்த்து!
இந்திய குடியரசு தினவிழாவிற்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 72 ஆவது குடியரசுத் தின விழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக குடியரசுத் தின விழாவின் சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வருவதாக இருந்தது. இதனை அந்நாட்டு பிரதமர் அலுவலகமும் உறுதிசெய்தது. ஆனால் புதிய உருமாறிய கொரோனா பரவல் காரணமாக போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்திய குடியரசு தின விழாவிற்கு இங்கிலாந்து போரிஸ் ஜான்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, ‘இந்திய குடியரசு தின விழாவிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன். இந்தியா வருவதற்கு நான் ஆவலாக இருந்தேன். ஆனால் கொரோனா பரவல் காரணமாக பங்கேற்க முடியவில்லை’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னதாக போரிஸ் ஜான்சனின் வருகையை முன்னிட்டு பெரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கொண்டாட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன.